Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாமின் முதல் சம்பாத்தியம்

கலாம் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்த சமயம் இரண்டாம் உலகப் போர் மிகக் கடுமையாக மூண்டது. அது 1939 ஆம் வருடம். அப்போது மார்க்கெட்டில் புளியங்கொட்டைக்கு ஏகப்பட்ட கிராக்கி. எதனால் இப்படி என்பதை எல்லாம் கலாம் அவர்களால் அந்தக் குறிப்பிட்ட வயதில் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், அவர் புளியங்கொட்டைகளை சேகரித்து மசூதி தெருவில் இருந்த ஒரு மளிகைக் கடையில் விற்பார். இந்த வியாபாரத்தில் கலாமிற்கு தினமும் ஒரு அணா கிடைக்கும். அதனைப் பத்திரமாகக் கொண்டு போய் தனது தாயாரிடம் கொடுத்து மகிழ்வார். இப்படியாகத் தனது சிறு வயதிலேயே குடும்பச் சுமையை உணர்ந்து அதனை தனது பிஞ்சுக் கரங்களால் தீர்க்க நினைத்தவர் நம் கலாம். இந்தியாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் இவர் மட்டுமே.

Comments