கலாமின் அன்பு
ஒரு முறை அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த ஒரு விஞ்ஞானி, தன் மேலதிகாரியிடம்,’ நான் என் பிள்ளைகளை இன்று கண் காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டார்.
மேலதிகாரியும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார்.
எனினும், வேலை மும்முரத்தில் ழூழ்கிய அந்த விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்த சமயம், மணி இரவு எட்டரை. இனி என்ன? பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்ற பயத்துடனேயே வீட்டுக்குச் சென்றார் அந்த விஞ்ஞானி. அப்போது வீட்டில், அவரது மனைவி மட்டுமே இருந்தார்கள்.
‘குழந்தைகள் எங்கே..?’ என்று கேட்டதும் மனைவி சொன்னார்கள் ‘சரியாக ஐந்தரை மணிக்குக் கிளம்பி கண்காட்சிக்குப் போய் விட்டார்கள். உங்கள் மேலதிகாரி தான் வந்து அழைத்துக் கொண்டு சென்றார்’ என்று.
விஞ்ஞானி வேலையில் ழூழ்கிவிட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பவில்லை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பவில்லை. தானே சென்று அந்த விஞ்ஞானியின் குழந்தைகளை அழைத்துச் சென்றார்.
அந்த மேலதிகாரியின் பெயர் தான் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
Comments
Post a Comment