கலாம் பரிசாகக் கேட்டது
அக்னி ஏவுகணை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட சமயத்தில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி.பந்த் கலாமிடம், ’கலாம் அவர்களே, இந்த வெற்றியை நாம் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதற்காகத் தாங்கள் கேட்கும் பரிசை நான் தரக் காத்துக் கொண்டு இருக்கிறேன்’ என்றார்.
அதற்கு கலாம் சிரித்துக் கொண்டே சொன்னாராம், ‘அப்படியானால் எங்களது அறிவியல் ஆராய்ச்சி வளாகத்தில் நடுவதற்கு ஒரு லட்சம் மரக் கன்றுகளை கொடுங்கள்’ என்று. இது தான் கலாம். அப்போதும் கூட அவர் தனக்காக ஏதும் கேட்கவில்லை பாருங்களேன்! இதனால் தான் கலாமை மக்கள் மறக்காமல் அவர் மறைந்தும் நேசிக்கின்றனர். ஏன்? என்றும் நம் மக்கள் அவரை நேசிப்பார்கள்.
Comments
Post a Comment