கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு
கலாமின் அறிவியல் அறிவைப் பற்றியும் 'நந்தி' விமானம் பற்றியும் நன்கு கேள்விப்பட்டு இருந்தார் பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன். அது மட்டும் அல்ல மும்பையில் இயங்கி வந்த இந்திய விண் வெளி ஆய்வுக் குழுவில் ராக்கெட் பொறியாளர் தேவை என்ற விபரத்தைச் சொல்லி கலாமை விண்ணப்பிக்க செய்தார் மேனன். மேனன் அப்போது டாடா ஆய்வு நிலையத்தில் இயக்குனராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் கலாமும் மேனன் சொன்னபடியே அப்பதவிக்கு விண்ணப்பித்தார். கலாமின் தகுதியையும், திறமையையும் கண்ட மும்பை தேர்வுக் குழுவினர் அன்றைய தினமே ராக்கெட் பொறியாளர் பதவியினை கலாமுக்கு அளித்தனர். இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக கலாமிற்கு இருந்தது.
இதில் இருந்து தான் கலாமின் வளர்ச்சி துவங்கியது. இந்திய நாட்டை வல்லரசு நாடாக ஆக்க வேண்டும், அதற்குத் தேவையான இராணுவத் தளவாடங்களையும், ஏவுகணைகளையும் நமது நாட்டில் தயாரித்து. அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாளும் அயராது உழைத்தார் கலாம்
Comments
Post a Comment