Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்

அமெரிக்காவில் ஆறு மாதப் பயிற்சியினைப் பெற்றுக் கொண்டு இந்தியா வந்தார் கலாம். இந்தியா வந்த கையோடு 21.11.1963 இல் இந்தியாவின் முதல் ராக்கெட் தயார் ஆனது. அப்போதெல்லாம் பெரிய வசதி இல்லாத காரணத்தால் ராக்கெட் இன் உதிரி பாகங்கள் சைக்கிள்களில் கூட சில சமயங்களில் கொண்டு வரப்பட்டது. அதனைக் கேட்டு அண்டை நாடுகள் சிரித்து வந்தன. அத்துடன் வல்லரசு நாடுகள் சில 'இந்தியா ராக்கெட் ஐ வடிவமைக்கிறதா? அவர்களால் இது முடியுமா?' என்றெல்லாம் ஏளனமாக இந்தியாவை பார்த்து வந்தது. இந்த நிலையில் தான் கலாம் தனது முதல் ராக்கெட் ஐ விஞ்ஞானிகளின் குழுவுடன் சேர்ந்து விக்ரம் சாராபாய் வழிகாட்ட வெற்றிகரமாக உருவாக்கி முடித்தார். வெற்றிகரமாகத் தயாரான ராக்கெட்டுகளை லாரி மூலம் ராக்கெட் ஏவு தளத்திற்கு கலாமின் குழுவினர் கொண்டு சென்றனர். கிரேன் மூலம் ராக்கெட்டை லாரியில் இருந்து ஏவு தளத்தில் பொருத்துவதற்குத் தயாராக இருந்தனர். அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பக்கமாக ராக்கெட் சரியத் தொடங்கியது. அந்த வேளையில் கிரேனைச் சரி செய்வது என்பது இயலாத காரியம் மட்டும் அல்ல ஆபத்தான காரியமும் கூட. இன்னும் சொல்லப் போனால் அது யாருமே செய்ய இயலாத, செய்யத் துணியாத காரியம். ஆனால் ராக்கெட் சரிவதைக் கண்ட கலாமும் அவரது குழுவினரும் ஓடிச் சென்று தங்களது கையாலேயே ராக்கெட்டை தூக்கி ஏவு தளத்தில் பொருத்தினார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் ராக்கெட் தனது முதல் சோதனையிலேயே வானத்தை கிழித்தபடி பெரும் சத்தத்துடன் பாய்ந்து சென்றது. அது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முதல் மைல் கல்லாகக் கருதப்பட்டது. அத்துடன் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்தது. கலாம் மற்றும் அவரது குழுவிற்கு பெரும் பாராட்டுகளை இச்சம்பம் பெற்றுத் தந்தது.

Comments