கலாமின் தமிழ் ஆர்வம்
அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் அதீத ஆர்வத்தை காட்டிய கலாம். தனது தாய் மொழியாம் தமிழ் இலக்கியத்திலும் இடைவிடாத ஈடுபாடு கொண்டு இருந்தார்.
அதன் விளைவாக சிறு வயதில் இருந்தே கட்டுரைப் போட்டி, தமிழ் பேச்சுப் போட்டி என அனைத்திலும் கலந்து கொண்டு கலாம் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆனார். கலாமின் திறமைகள் அனைத்திற்கும் அவரது பேராசிரியர்களும் துணை நின்றனர்.
ஒரு முறை எம். ஐ. டி. நடத்திய கட்டுரைப் போட்டியில் 'ஆகாய விமானம் கட்டுவோம்' என்ற தலைப்பு இடம் பெற்று இருந்தது. ஆர்வமுடன் அந்தக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டார் கலாம். அத்துடன் அந்தப் போட்டியில் அவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்ததோடு அந்தக் கட்டுரை ஆனந்த விகடன் வார இதழிலும் பிரசுரமானது. அந்த இதழின் ஆசிரியரும் கலாமிற்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இப்படியாக நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் தனது இரு கண்களாகப் போற்றி வந்தார் கலாம்.
Comments
Post a Comment